இரவில் தடம் புரண்ட பயணிகள் ரயில்! 4 பேர் பலி!

இரவில் தடம் புரண்ட பயணிகள் ரயில்! 4 பேர் பலி!

T.E.Mohamad,

  டெல்லியில் இருந்து கவுகாத்தி செல்லும் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து காமாக்யா நோக்கிச் செல்லும் போது, அந்த ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தின் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே  இரவு 9.35 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

  பயணிகள் ரயில் தண்டவாளத்தை விட்டு விலகி 5 பெட்டிகள் தரையில் உருண்டு கவிழ்ந்தன. இதையடுத்து ரயிலில் இருந்த பயணிகள் அலறியடித்தப்படி கீழே இறங்கினர். மேலும் தடம் புரண்ட 5 பெட்டிகளில் இருந்த பயணிகளை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.ரயில் விபத்து நடந்த பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாதால் மீட்புப்பணியில் சிரமம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.