கலெக்டர்கள் எஸ்பிக்கள் மாற்றம்! தேர்தல் பார்வையாளர்கள் அதிருப்தி!!

கலெக்டர்கள் எஸ்பிக்கள் மாற்றம்! தேர்தல் பார்வையாளர்கள் அதிருப்தி!!

   உ.சசிகுமார்,

 ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் நவம்பர் 7 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும். இந்த ஐந்து மாநிலங்களில் நடந்த ஆய்வுக் கூட்டங்களின் போது, அதிகாரிகளின் அலட்சியத்தை கவனித்ததாகவும், ஆகையால் கீழ்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

   அதன்படி தெலங்கானா மாநில சட்டசபைக்கு வரும் நவம்பர் 30 ஆம் தேதி வாக்குபதிவும் டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகளும் 5 மாநிலங்களிலும் அமலுக்கு வந்துள்ளன.

 அப்படியிருக்க தெலங்கானா மாநிலத்தில் ரங்காரெட்டி, மேட்சல், யாதாத்ரி, நிர்மல் ஆகிய நான்கு மாவட்ட கலெக்டர்களை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  அதே போல் 13 காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களையும் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து அதிரடி காட்டியுள்ளது.

   தெலுங்கானா மாநில போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் கலால் துறை இயக்குனர்  அம்மாநில வணிக வரித்துறை ஆணையரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கலால் மற்றும் வணிக வரித்துறைக்கு சிறப்பு செயலாளர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 மேலும், ஹைதராபாத், வாரங்கல் மற்றும் நிஜாமாபாத் காவல் ஆணையர்களும், ஹைதராபாத் காவல் ஆணையர் சிவி ஆனந்த், வாரங்கல் காவல் ஆணையர் ரங்கநாத், நிஜாமாபாத் காவல் ஆணையர் சத்யநாராயணா, போக்குவரத்து செயலாளர் சீனிவாச ராஜு, வணிக வரித்துறை ஆணையர் டிகே ஸ்ரீதேவி, கலால் இயக்குநர் முஷாரப் அலி ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 மேலும் 9 மாவட்ட கேடர் அல்லாத எஸ்பிகளையும் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து இன்று மாலை 5 மணிக்குள் புதிய குழுவை அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.