கள்ளக் குறிச்சியில் போட்டியிடும் பாரிவேந்தர்! கமலஹாசனுக்கு பெரம்பலூரா? கோவையா?

டி.இ.இர்பான்,
எஸ். ஆர். எம். நிறுவனரும், பெரம்பலூர் சிட்டிங் எம்.பி.யுமான பாரிவேந்தர் இம்முறை தனது சொந்த தொகுதியான கள்ளக்குறிச்சியை தேர்வு செய்திருக்கிறார். இந்த எண்ணத்தை சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாக போட்டு உடைத்தார். தான் பிறந்து வளர்ந்த கள்ளக்குறிச்சி தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்ல விரும்புவதாக கூறியிருக்கிறார்.
பாஜக கூட்டணியில் கள்ளக்குறிச்சி தொகுதி பாரிவேந்தருக்கு ஒதுக்க அதிக வாய்ப்பிருக்கிறது. பாரிவேந்தர் அணி மாறியதால் திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதி காலியாக இருக்கிறது. இதை திமுகவினருக்கே ஒதுக்கலாமா? இல்லை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கலாமா? என தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் மக்கள் நீதி மய்யத்தின் கமல் ஹாசன் திமுக பக்கம் இணக்கமாக செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்.
2021 தேர்தலில் வெறும் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தான் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வியை தழுவினா£ கமல்¢. நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யத்திற்கு இருக்கும் செல்வாக்கில் கோவை ஒரு அடி முன்னே நிற்கிறது. எனவே கோவை மக்களவை தொகுதியை கமல் கேட்க அதிக வாய்ப்புண்டு. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் மூலம் தூது அனுப்பப்பட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் கோவை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர்.நடராஜனிடம் இருக்கிறது சற்று நெருடல் தான்.
இந்நிலையில் பாரிவேந்தரால் காலியான பெரம்பலூர் தொகுதியை கமலுக்கு ஒதுக்க முன்வந்திருப்பதாக கூறுகின்றனர். இந்த தொகுதியில் பாரிவேந்தர் 4,03,518 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதுவும் திமுக வேட்பாளராக நின்று செய்து காட்டினார். அதேபோல் கமலுக்கும் பிரகாசமான வெற்றி வாய்ப்புள்ளது.