வருமான வரித்துறை அதிகாரிகளை ஏவியவர்கள் எங்கோ உள்ளனர்! கற்பனையான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள்!! அமைச்சர் எ.வ.வேலு!

ம.பா.கெஜராஜ்,
வருமான வரித்துறை அதிகாரிகளை நான் குறை கூற மாட்டேன். சோதனை நடத்துவது அவர்களது கடமை. அவர்களை ஏவியவர்கள் எங்கோ உள்ளனர், தன்னை மட்டுமல்லாமல் தன்னை சார்ந்தவர்களையும் வருமான வரி துறையினர் அச்சுறுத்தியதாகவும், ஐந்து நாட்களாக ஊடகங்கள் கற்பனை செய்தி வெளியிட்டதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்ற நிலையில், அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், வருமான வரி துணையினர் தன்னை மட்டுமல்லாமல் தன்னை சார்ந்தவர்களையும் கடந்த ஐந்து நாட்களாக அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.
வருமான வரித் துறை அதிகாரிகளை நான் குறை கூற மாட்டேன்.சோதனை நடத்துவது அவர்களதுகடமை. அவர்களை ஏவியவர்கள் எங்கோ உள்ளனர். எனது நேர்முக உதவியாளர் சுப்பிரமணி, கார் ஓட்டுநர் ஆகியோரை 4 நாட்களுக்கு தனிமைப்படுத்தி, அச்சுறுத்தி, விசாரணை நடத்தியுள்ளனர். எனது கல்லூரி, வீடு என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தியதுடன், கல்லூரி அலுவலர்களையும் விசாரித்தனர். நானும், எனது மகன்களும், மனைவியும் வருமான வரி செலுத்தி வருகிறோம்.
என்னிடம் கோரிக்கைகளை கூற வந்த திமுகவினரிடமும் சோதனை நடத்துவது நியாயமா? அதிகாரிகள் திமுகவைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே சோதனை மேற்கொள்கின்றனர். ஆனால், இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். எனது கட்சிப் பணி, அரசுப் பணிகளை கடந்த 5 நாட்களாக முடக்கி உள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, எதிர்க்கட்சியினரை அச்சுறுத்த வருமான வரித் துறையை பயன்படுத்துகின்றனர்.
2021-ல் திருவண்ணாமலையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற போது சோதனை நடத்தி, எனது தேர்தல் பணியை 2 நாட்களுக்குத் தடுத்தனர்.
நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். திருவண்ணாமலைக்கு வந்து அச்சகம் நடத்தினேன். பின்னர், லாரி தொழில் செய்தேன். திரைப்பட விநியோகிஸ்தர், தயாரிப்பாளராக இருந்துள்ளேன். அப்போது சம்பாதித்த பணத்தைக்கொண்டு, எனது தாய் சரஸ்வதி அம்மாள் பெயரில் அறக்கட்டளை தொடங்கினேன்.
குறிப்பாக காசா கிராண்ட் நிறுவனம், அப்பாசாமி விடுதி ஆகியவற்றுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. கோவை மீனா ஜெயக்குமார் குடும்பத்தையும், எனது குடும்பத்தையும் தொடர்புபடுத்தி பேசுவது நியாயமா?
திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயக்குமார், 20 ஆண்டுகளாக ரியஸ் எஸ்டேட் நிறுவனம் நடத்துகிறார் கோவை சென்றால், என்னை வந்து சந்திப்பார். அவ்வளவுதான் பழக்கம். அபிராமி ராமநாதன் யார் என்றே தெரியாது. என்று தெரிவித்தார்.
மேலும் இந்த ஐந்து நாட்கள் கற்பனையான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன, தன் வீட்டில், வருமான வரி சோதனையை பார்த்து நாங்கள் அஞ்ச மாட்டோம். எனது வீடு, மனைவி வீடு, மகன்கள் வீட்டில் ஒரு பைசா பறிமுதல் செய்திருந்தாலும், அதற்குப் பொறுப்பேற்று பதில் சொல்லத் தயார். தமிழகத்தில் பிஜேபி கட்சியை சேர்ந்த தொழிலதிபர்கள் வீடுகளில் வருமானவரி துறையினர் சோதனை செய்வது இல்லை.
இந்த சோதனையில் தன்னுடைய கழக பணி, தன்னுடைய அரசு பணி ஐந்து நாட்களும் முடங்கியதாகவும், இந்த வருமானவரி துறையினர் சோதனைக்கு எல்லாம் அஞ்சியவர்கள் நாங்கள் கிடையாது, இந்த வருமான வரித்துறை சோதனையினால் தான் மற்றும் தன்னை சார்ந்தவர்கள் சிரமத்திற்கு தள்ளப்பட்டதாகவும், வருமான வரி துறையினரின் மீது தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என செய்தியார்களிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சொன்னார்.