பள்ளிக்கூடத்தை ரவுண்டு கட்டிய பெற்றோர்!

பள்ளிக்கூடத்தை ரவுண்டு கட்டிய பெற்றோர்!

ஜி.கே.சேகரன்,

 வாணியம்பாடி அருகே அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் கட்ட 37 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு கிடப்பில் உள்ளதால் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அலசந்திராபுரம் கிராமத்தில் அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி பழைய கட்டிடமாகவும், சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளதால்

புதிய கட்டிடம் கட்ட 37 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் நடக்காமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்தும், கட்டிட பணிகள் துவங்க வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திம்மாம்பேட்டை காவல்துறையினர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.