கொதித்தெழுந்த ஊராட்சி செயலாளர்கள்!

கு.அசோக்,
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏந்தியபடி வேலூ£, திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகங்கள் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வினோத் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது இதில் மாநில செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முறையான காலம் முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்துகளுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலர்களுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைவரும் தமிழக அரசுக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏந்தியபடி தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை வெளிப்படுத்தினார்கள்
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாசலில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மாநில மையம் சார்பாக மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 208 ஊராட்சிகளில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி முதற்கட்டமாக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இது ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் 4ம் தேதி சென்னை ஊரக வளர்ச்சி துறை ஆணையம் முன்பு பெருஞ்திறல் முறையீடும் அதே போன்று ஏப்ரல் 21 ஆம் தேதி காத்திருப்பு போராட்டமும் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
அப்போது முறையான காலம் முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்துகளுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலர்களுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு அனைவரும் தமிழக அரசுக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏந்தியபடி தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை வெளிப்படுத்தினார்கள்..