துப்பாக்கி சகிதமாக வட மாநில கொள்ளையர்கள்!

 கு.அசோக்,

 சித்தூரில் 4 வட மாநில கொள்ளையர்கள் துப்பாக்கிகளுடன் வீட்டில் புகுந்து கொள்ளை முயற்சி இரண்டு பேரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பிடித்தனர் மேலும்  மூன்று பேரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர முயற்சி செய்து துப்பாக்கிகளுடன் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர்.

 ஆந்திரமாநிலம்,சித்தூர்மாவட்டம்,லட்சுமி திரையரங்கம் அருகே அமைந்துள்ள புஷ்பா கிட் வேர்ல்ட் ஷாப் உரிமையாளர் வீட்டில் காலை சுமார் 6.30 மணிக்கு கொள்ளையர்கள் புகுந்தனர்.

  துப்பாக்கியால் சுட்ட பின்னர் உரிமையாளர் கும்பலை எச்சரித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

 அப்போது கொள்ளையர்களின் இரண்டு துப்பாக்கிகளில் இருந்து தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

 மாவட்ட எஸ்பி மணிகண்ட செந்தோலு சம்பவ இடத்துக்கு வந்தார்.

 கொள்ளையர்களை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து இரண்டு பேரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர் மேலும் 3 பேர் துப்பாக்கியுடன் பதுங்கியுள்ளனர்.

 அனைவரும்  வடமாநிலத்தவர்கள் துப்பாக்கி ஏந்திய  போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்துள்ளனர் மேலும் மூன்று  பேரை கைது செய்தனர்.