பதவி வரம் அருளும் கோவிலில் ஓ. பன்னீர்செல்வம் வழிபாடு!

க.பாலகுரு,
திருவாரூர் அருகே பதவி வரமருளும் சூட்சமபுரீஸ்வரர் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
திருவாரூர் அருகே பூந்தோட்டம் - கடகம்பாடி திருச்சிறுகுடி (எ) செருகுடி பகுதியில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்ரீமங்களநாயகி சமேத சூட்சமபுரீஸ்வரர் ( எ)
மங்களபுரீஸ்வரர் கோயில் உள்ளது.
செவ்வாய்க்கு தனி சன்னதி கொண்ட இக்கோயிலில் வேண்டுவோர்க்கு வேண்டிய பதவி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதுகுறித்து அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், குடந்தை ராமநாதன் ஆகியோர் கடந்த மாதம் இக்கோயிலில் வழிபாடு நடத்தினர்.
இந்நிலையில், இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
அப்போது கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.