முதியவரின் 4 ஏக்கர் நிலத்தை ஆட்டையை போட்ட உறவினர்கள் மீது புகார்!

முதியவரின் 4 ஏக்கர் நிலத்தை ஆட்டையை போட்ட உறவினர்கள் மீது புகார்!

க.பாலகுரு,

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொத்தை போலி கையெழுத்திட்டு அபகரித்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க  கோரிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அழிக்கப்பட்டு இருக்கிறது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கீரக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். 85 வயதான இவர் எழுதப் படிக்கத் தெரியாதவர்.

இவருக்கு சொந்தமான சுமார் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தினை அவரது உறவினர்களான மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் குலோத்துங்கன் மோசடி செய்து அபகரித்து விட்டனர்.

நிலத்தின் உரிமையாளர் பெரியவர்சண்முகம் போன்று போலியாக கையெழுத்திட்டு நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து சண்முகத்தின் மகன் வீரமணி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதற்கான ஆதார விவரங்களை சேகரித்தார்.

அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சண்முகம் மற்றும் அவரது மகன் வீரமணி ஆகியோர்,  மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் குலோத்துங்கன் ஆகியோர் மீது நடவடிக்கை மேற்கொண்டு நிலத்தை மீட்டுத்தர கோரிக்கை மனுவினை அளித்தனர்.