குடும்பத்தை வழி நடத்த பெண்மணியால் மட்டுமே முடியும்! மகளிர் கல்லூரி விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு!

குடும்பத்தை வழி நடத்த பெண்மணியால் மட்டுமே முடியும்! மகளிர் கல்லூரி விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு!

கு.அசோக்,

   வாலாஜா  அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரியில் ரூபாய் ஒரு கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள  கட்டிடங்களை திறந்து வைத்துவிட்டு பேசிய அமைச்சா ஆர்.காந்தி¢ குடும்பத்தை வழி நடத்த வேண்டுமென்றால் ஒரு பெண்மணியாள் மட்டும்தான் முடியும் என்றார்.

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரிரில் ரூ.15 லட்சம்  மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நுழைவு வாயில், ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டிடம் ரூ.27.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கழிவறை ரூ.8.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாணவர்கள் ஓய்வெடுக்கும் கூடுதல் அறை உள்ளிட்ட ரூபாய் ஒரு கோடியே 11 லட்சம் மதிப்பிலான அனைத்து  கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

 இதனை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆ£.காந்தி அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று புதிதாக கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களையும் ரிப்பன் வெட்டியும் கல்வெட்டை கொண்டு திறந்து வைத்தனர்.

 தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கைத்தறி துணி நூல்துறை அமைச்சர் காந்தி ஒரு குடும்பத்தை வழி நடத்த வேண்டு மென்றால் ஒரு பெண்மணியாள் மட்டும் தான் முடியும் தவிர வேறு  யாரலையும் முடியாது எனவும் அதே போன்று தான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்  பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது கருணாநிதி¢ தான் என பெருமிதமாக மேடையில் பேசினார்.