ஒவைசியை ஓரம் கட்டிய எதிர்கட்சி கூட்டம்! இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்கிறாரா?

ஒவைசியை ஓரம் கட்டிய எதிர்கட்சி கூட்டம்! இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்கிறாரா?

ம.பா.கெஜராஜ்,

ஒவைசி, மாயாவதி மற்றும் குமாரசாமி ஆகியோரை நேற்று நடந்த எதிர்கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்த்துக்கு அழைப்பு கொடுக்காமல் ஓரம் கட்டியிருக்கிறார்கள்.

 எதிர் நோக்கியிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கான வியுகங்களை மாநில கட்சிகளுடன் இணைந்து தேசிய கட்சிகள் தொடங்கியிருக்கிறன. அதில் தற்போதைக்கு எதிர்கட்சிகளின் கூட்டு நல்ல பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என சொல்லிவிட முடியாது, இருந்தாலும் சொல்லலாம்.

 கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் பெரும்பான்மையாக வெற்றி பெற்று பெரும் வலிமையாக இருக்கும் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற சூழலை இந்தியாவில் உள்ள பிரதான எதிர்கட்சிகளில் 24 கட்சிகள் உணர்ந்துள்ளன.

 இவர்கள் ஒன்று கூடி பாட்னாவில் ஜூன் 23 ஆம் தேதியும், பெங்களூருவின் 18 ஆம் தேதியும் என இரண்டு கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள், இதில் முதல் கூட்டத்தில் இருந்த ஒரு சில முரண்பாடுகள் கலையப்பட்டிருக்கிறது. குறிப்பாக காங்கிரஸிடன் முறுக்கிக் கொண்டிருந்த ஆம் ஆத்மி பார்ட்டி தன்னுடைய இறுக்கத்தை தளர்த்திக் கொண்டிருக்கிறது. டெல்லி ஆமாத்மி அரசுக்கு பா.ஜ.க. அரசு கொடுக்கும் நெருக்கடியை காங்கிரஸ் எதிர்பதாக சொல்லியிருக்கும் நேரத்தில் இந்த மேஜிக் நிகழ்ந்துள்ளது.

 இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தற்போதைய கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி (இந்தியா) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, பிரதமர் பதவியை பெறுவதிலோ அதிகாரத்தை பெறுவதிலோ காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை என்றார். இதேபோல் மற்ற தலைவர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

 இருந்தாலும் பா.ஜ.க.வை வெறுக்கும் போக்கில் உள்ள இஸ்லாமியர்களின் மத்தியில், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி நிறுவனர் ஓவைசி பா.ஜ.க.வின் பி டீமாக இருப்பதாகவே பலரும் பார்க்கிறார்கள். ஆகவே அவரை இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்களாக அம்மதத்தினர் குறியீடு செய்து வைத்திருக்கிறார்கள்.

   இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்து ஒவைசி கட்சி செய்தி தொடர்பாளா வரிஸ் பதான்¢ சொல்வது என்னவென்றால்,  ''அவர்கள் எங்களை அழைக்கவில்லை. அவர்களுக்கு நாங்கள் அரசியல் தீண்டத்தகாதவர்கள். நிதிஷ் குமார், உத்தவ் தாக்கரே, மெகபூபா முப்தி உள்ளிட்ட அங்கிருக்கும் தலைவர்கள் பா.ஜ.க.வுடன் ஏற்கனவே கைக்கோர்த்தவர்கள்.

 அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் சட்டசபை தேர்தலின்போது காங்கிரசை கடும் விமர்சனம் செய்தார். அவரும் அங்கே உட்கார்ந்து இருப்பதை நாம் பார்த்தோம். நாங்கள் 2024-ல் மோடி அரசை தோற்கடிக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். ஆனால், ஒவைசி மற்றும் எங்கள் கட்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது'' ரொம்பவே நடித்துள்ளார்.

 ஒவைசி வரிசையில் முன்னாள் முதல்வர்களான உ.பி.யின் செல்வி மாயாவதி, கர்நாடகாவின் குமாரசாமியும் உள்ளார்கள்