மோடிக்கு பக்கத்திலேயே எடப்பாடி! செம குஷியில் அதிமுக!

மோடிக்கு பக்கத்திலேயே எடப்பாடி! செம குஷியில் அதிமுக!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

 புது டெல்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் 38 கட்சிகள் பங்கேற்றன.

  அந்த வகையில் தமிழ்நாட்டிலிருந்து அதிமுக, பாமக, புதிய தமிழகம், தமாகா, உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. புதுச்சேரியிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டது. பவன் கல்யாணின் ஜன சேனா, லோக் ஜனசக்தியின் இரு பிரிவுகள், ராஷ்ட்ரீய லோக் சமதா, நிஷாத், அப்னா தளம், ஜேஜேபி, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, சிவசேனாவின் ஷிண்டே பிரிவு, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பிரிவு உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டன

  கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு அருகிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு இடம் ஒதுக்கப்பட்டது. எடப்பாடிக்கு அடுத்து தான் ராஜ்நாத் சிங்குக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அது மட்டுனின்றி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுக்கும் போதும் மோடிக்கு அருகில் எடப்பாடி பழனிசாமிக்கு இடம் கொடுக்கப்பட்டது.

   "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவையும் அதன் தலைவர்களையும் எதிர்த்து பேசி வருகிறார். ஆனால் தலைமையோ அதிமுகவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது.      

  இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் 38 கட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் பாஜகவுக்கு அடுத்தபடியாக பெரிய கட்சி அதிமுக தான். 65 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 மாநிலங்களவை உறுப்பினர்களைப் பெற்றுள்ளோம். இந்த பலம் பாஜகவுக்கு அடுத்தபடியாக வேறு எந்த கட்சிக்கும் இல்லை என்பதை நினைத்துப் பார்த்திருக்கிறது பா.ஜ.க.

  அதனால் தான் ஓ.பி.எஸ்ஸை அவர்கள் கன்சிடர் செய்யவில்லை.

  4,200/-கோடி ரூபாய் ஊழல் வழக்கு தள்ளுபடி, மோடியின் அரவணைப்பு எல்லாம் ஒரே அமர்கலமாக இருக்கிறது.. ஆனால் மக்கள்?