வேலூர் இராணிப்பேட்டையில் புதிய  பள்ளிக் கட்டிடம்... மாணாக்கள் மகிழ்ச்சி!

வேலூர் இராணிப்பேட்டையில் புதிய  பள்ளிக் கட்டிடம்... மாணாக்கள் மகிழ்ச்சி!

கு.அசோக்,

வேலூர் மாவட்டம்,

 தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்த நாளில் ஆசிரியைகள் பூக்கள், பென்சில், சாக்லேட் மற்றும் பர்பி உள்ளிட்ட இனிப்புகளை குழந்தைகளுக்கு கொடுத்து வரவேற்றனர்.

 வேலூர்மாவட்டம்,வசந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி இன்று விடுமுறைக்கு பின்னர் திறக்கப்பட்டது பள்ளி குழந்தைகளும் ஆர்வமுடன் பள்ளி வந்தனர். அவர்களை பள்ளியின் முதல்வர் ஹேமலதா தலைமையில் பென் சில் மற்றும் சாக்லேட்டுகள் பர்பி உள்ளிட்ட இனிப்புகளை கொடுத்து வரவேற்றனர்.

பெற்றோர்களும் ஆர்வமுடன் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர். இதில் தொழிலதிபர் லோகநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றினார்.

 பின்னர் பிள்ளைகள் தமிழ்த்தாய் வாழ்த்து தேசிய கீதம் பாடலுக்கு பின்னர் வகுப்பறைகளுக்கு ஆர்வமுடன் சென்றனர்.

இராணிப்பேட்டை மாவட்டம்.

 அதே போல் சோளிங்கர் கூடலூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி 19 லட்சம் மதிப்பிலான வகுப்பறைகள் திறக்கப்பட்டது.

 இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கூடலூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று  வருகின்றனர். கூடுதலாக பள்ளி கட்டிடம் வேண்டுமென பொதுமக்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்தனர்.

 இந்த கோரிக்கையை ஏற்று அரசு, கடந்த ஆண்டு 19 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை கட்டி முடித்தது. தற்போது பள்ளி துவக்கம் முதல் நாளான இன்று மாணவர்களுக்கு பயன்படும் வகையில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

 ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை குத்து விளக்கு ஏற்றி  மாணவர்கள் பயண்பாட்டிற்க்கு கொண்டு வந்தார்.

 மாணவ மாணவிகள் பொதுமக்கள் இனிப்பு வழங்கினார்கள். மற்றும் ஆசிரியர்கள் ,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்