9.3 கோடி விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி! மோடி போட்ட முதல் கையெழுத்து!

மூன்றாவது முறையாக நேற்று பிரதமர் பதவி ஏற்று கொண்ட மோடி இன்று நாடாளுமன்ற அலுவலகத்தில் தமது பணியை துவங்கினார். 

அப்போது பிரதமர் மோடி அவர்கள் 9.3 கோடி விவசாயிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடியை விடுவித்து முதல் கையொப்பமிட்டார்.

இது பயனாளிகளுக்கு தலா ரூ.2000 என  வழங்கப்படுவதற்கான17ஆவது தவணை தொகையாகும்.

முன்னதாக பிரதமர் நாடாளுமன்ற கட்டிடத்தின் தெற்கு பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு வந்தபோது அலுவலக ஊழியர்கள் அனைவரும் இரு பக்கமும் நின்றவாறு அவரை கைதட்டி வரவேற்றனர்.