தமிழகம் உட்பட13 தொகுதிகளில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல்!

ம.பா.கெஜராஜ்,
வரும் ஜூலை மாதம் பத்தாம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியும் அடக்கம்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் துவக்கத்தில் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த திரு.புகழேந்தி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார்.
ஆகவே மக்களவைத் தேர்தலின் போது விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அரசியல் கட்சிகள் எதிர்பார்த்தபடி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அப்போதைக்கு நடத்தவில்லை.
இந்நிலையில், ஜூலை மாதம் பத்தாம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அப்படி இருக்க வேட்பு மனு தாக்கல் ஜூன் மாதம் 14ஆம் தேதி துவங்கி 21ஆம் தேதி மாலை வரை நடைபெறும்.
வேடபு மனுவை வாபஸ் பெற விரும்புவோர் ஜூன் மாதம் 24 ஆம் தேதி மாலை வரை திரும்பப் பெறலாம்.
வாக்கு எண்ணிக்கையானது ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இப்போதுதான் மக்களவைத் தேர்தல் முடிந்து சற்று ஓய்வாக அமர நினைத்த அரசியல்வாதிகளுக்கு இடைத்தேர்தல் மீண்டும் சுறுசுறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.