உத்தவ்தாக்கரே டீம் எம்.பி.கள் என்டிஏவுக்கு தாவுகிறார்களா? அடம் பிடித்த அஜித்பவார்! மிரட்டும் மகாராஷ்டிரா கட்சிகள்!

ம.பா.கெஜராஜ்,
அய்யோ தெரியாமல் பெரும்பான்மை பெறவில்லை என்பதற்காக என் .டி. ஏ வை பல குட்டிக்கட்சிகள் பிளாக் மெயில் செய்து பதவி பெற முயன்றனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 9 இடங்களிலும் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும், வெற்றிபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிண்டே கட்சி மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது.
அப்படியிருக்க ஷிண்டே கட்சியைச் சேர்ந்த எம்.பி. நரேஷ் மாஸ்கே கூறும்போது, "உத்தவ் அணியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தொடர்புகொண்டு பேசினர். அப்போது, இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என கருதியதாகவும் அது நடக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆகவே, தங்கள் தொகுதியின் மேம்பாட்டுக்காக பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிக்க விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதேநேரம், அவ்வாறு செய்தால் தகுதிநீக்கம் செய்யப்படுவோம் எனகவலை தெரிவித்தனர். மேலும் தகுதிநீக்கத்தை தவிர்க்க மேலும் 4 எம்.பி.க்களின் ஆதரவை திரட்டிக்கொண்டு பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்" என்று கொளுத்தி போட்டிருக்கிறார்.
இதுகுறித்து உத்தவ் அணியைசேர்ந்த மூத்த தலைவர் சுஷ்மா அந்தாரே கூறும்போது, "நரேஷ் மாஸ்கே கூறியதில் உண்மை இல்லை. தனது கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக அவர் இதுபோன்ற தகவலை கூறியுள்ளார்.
எம்.பி.யாக உள்ள அவர் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது. அவர் கூறுவது உண்மையாக இருந்தால், தொடர்பு கொண்டு பேசியவர்களின் பெயரை தெரிவிக்க வேண்டும். மத்திய அமைச்சரவையில் தனக்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் இதுபோன்று கூறுகிறார்" என்று கொஞ்சம் அச்சத்துடனே சொல்கிறார்.
முன்னதாக மோடி பதவியேற்பதற்கு முன் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த அஜித்பவார் ஒரு கோரிக்கையை மோடியிடம் வைத்து மூக்கறூபட்டிருக்கிறார்.
புதிய அமைச்சரவையில் தங்களுக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வேண்டும் என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
"பிரஃபுல் படேல், மத்திய அமைச்சராக பணியாற்றியவர். அவர் தற்போது அமையும் புதிய அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக் கொள்வது சரியாக இருக்காது என நாங்கள் கருதுகிறோம். அதனால் அடுத்த சில நாட்களுக்கு நாங்கள் காத்திருக்கிறோம். எங்களுக்கு கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் பதவி வேண்டுமென பாஜகவிடம் தெரிவித்துவிட்டதாக தகவல்களை பரப்பினார்.
இன்று எங்கள் வசம் ஒரு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் இருக்கலாம். அடுத்த சில மாதங்களில் எங்களுக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடைப்பார்கள். நாடாளுமன்றத்தில் எங்கள் எண்ணிக்கை 4 என உயரும்.
அதனால் எங்களுக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வேண்டும் என சொல்லியுள்ளோம்" என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் தெரிவித்திருந்தார்.
ஒரு உத்தவ் தாக்ரேவை பகைத்துக் கொண்டதால் மகாராஷ்டிராவில் திரும்பும் இடமெல்லாம் பாஜகவை நெருக்குகிறார்கள்.