நன்னிலம் வணிகர்கள் சங்கம் தேர்தல்... வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் வாழ்த்து!

க.பாலகுரு,
திருவாரூர் மாவட்டத்தில், 'தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு ' -ன் நன்னிலம் வர்த்தக சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
நன்னிலம் பகுதியில் மொத்தம் 425 வர்த்தகர்கள் கடைகள் நடத்தி வருகிறார்கள். அவர்களில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் வர்த்தக சங்க தேர்தல் கடந்த 18/5/2024 அன்று காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டது..
தலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டியிட்ட நிலையில். சமூக ஆர்வலர் செல். சரவணன் தலைவர் பதவிக்கும், வேலு கணேஷ், சந்தனகுமார், தினேஷ் உள்ளிட்டோர் துணைத்தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருவாரூர் மாவட்ட தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி சால்வை அணிவித்து.. சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை முன்னாள் அமைச்சர் காமராஜ் வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நன்னிலம் வர்த்தகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற நிர்வாகிகளை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.