கிருஷ்ணா கல்லூரி காம்பவுன்ட் இடிந்து விழுந்தது:- 5 தொழிலாளர்கள் பலி! கலெக்டர் நேரில் விசாரணை!!

கிருஷ்ணா கல்லூரி காம்பவுன்ட் இடிந்து விழுந்தது:- 5 தொழிலாளர்கள் பலி! கலெக்டர் நேரில் விசாரணை!!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,

 கல்லூரியின் காம்பவுன்ட் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியானார்கள், இதன் காரணமாக காண்டிராக்டர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

விபத்து நடந்த கல்லூரி பகுதிக்கு சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் இ.ஆ.ப. அவர்கள் முழுமையாக விசாரணைக்கு உத்தரவிட்டார்.

 கோவையில் உள்ள கிருஷ்ணா கலைக்கல்லூரியில் ஏற்கனவே காம்பவுண்ட் சுவர் சேதமடைந்துவிட்டதால், அதன் பக்கதிலேயே 10 அடி உயரம் கொண்ட சுவர் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பழைய சுவர் திடீரென தொழிலாளர்கள் மீது இடிந்து விழுந்துள்ளது.

 இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் சிக்கி நான்கு பேர் இறந்தனர். பலர் காயமட்ய்ந்து அவர்களை ஆஸ்பத்திரில் சேர்த்துள்ள நிலையில், அதில் இருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

 இறந்தவர்களில் 3 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

 இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் இ.ஆ.ப.அவர்கள் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.