கர்நாடக அரசு ஸ்கூல் குழந்தைகள்!! நில அளவீடு செய்வதால் மட்டும் அணையை கட்டிவிட முடியாது! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,
கர்நாடக அரசு நில அளவீடு செய்வதால் மட்டும் அணையை கட்டிவிட முடியாது அவர்கள் எடுக்கும் நடவடிக்கை கடுமையாக இருந்தால் தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடும் - தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சேவூரில் பேட்டி.
வேலூர்மாவட்டம், கேவிகுப்பம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மிதி வண்டிகள் வழங்கும் விழாவானது நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு, விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்
அதேபோல் லத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் விலையில்லா மிதி வண்டிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார் இவ்விழாவில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் பள்ளி மாணவ,மாணவிகளும் பங்கேற்றனர்
முன்னதாக கே.வி.குப்பத்தில் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிகாலத்தில் கேவிகுப்பம் தனி தாலுக்காவாக அறிவிக்கப்பட்டதை பாராட்டுகிறேன். ஆனால் போதுமான முன்னேற்றம் என்பது கிடையாது இங்கு அரசு கல்லூரி தேவை என கேட்டுள்ளனர் அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கபடும் என பேசினார்
பின்னர் சேவூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் காட்பாடி தொகுதிக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்
இக்கூட்டத்திற்கு பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் காவிரியில் அனைக்கட்ட கர்நாடக அரசு அளவீடு செய்வதால் மட்டும் அவர்கள் அனையை கட்டிவிட முடியாது. கீழே உள்ள தமிழகத்திடம் அனுமதியை பெற்று தான் இதனை அவர்கள் செய்ய வேண்டும். இதற்கு டி.பி.ஆர் செய்ய வேண்டும்.
கர்நாடகம் மத்திய அரசு ஒப்புதல் தந்து சுற்றுசூழல் மாசுக்கட்டுபாடு வனத்துறை மற்றும் காவிரி மேலாண்மை குழு ஆகியோர் ஒப்புதல் தந்தால் மட்டுமே அனைகட்ட முடியும்.
ஆனால் அவைகள் எல்லாம் முடியாது! கர்நாடக புதிய அரசு ஸ்கூல் குழந்தைகள் புதிய புத்தகத்தை பார்த்து படிப்பதை போல் வேகமாக உள்ளது. இது பரபரப்பான செய்தி அதற்காக அவர்கள் அனையை கட்ட முடியாது அவர்கள் எடுக்கும் நடவடிக்கை கடுமையாக இருந்தால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடும்.
வரும் 11ஆம் தேதி காவிரி மேலாண்மை குழு கூட்டத்தில் அதிகாரிகள் கலந்துகொண்டு தமிழக அரசின் நிலைபாட்டை விளக்குவார்கள் காட்பாடி தொகுதியில் கிராம பஞ்சாயத்துகளில் என்னென்ன பணிகள் நடக்கிறது எந்த பணிகள் நிலுவையில் உள்ளது என ஆய்வு செய்கிறோம்.
ஒவ்வொரு பஞ்சாயத்தாக ஆய்வு செய்தோம் சில பஞ்சாயத்துகளில் பணி தொய்வு உள்ளது அவைகளை முடிக்க சொல்லியுள்ளோம், சில பஞ்சாயத்துகளுக்கு ஒரு சில வேலைகளை சொல்லியுள்ளோம் மேல் அரசம்பட்டு அணைக்காக நிதித்துறைக்கு கோப்பு சென்றுள்ளது என கூறினார்.