ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு!

பா.சுரேஷ்.
ஜெயலலிதாவின் 7வது நினைவு நாளை முன்னிட்டு நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர கழக அதிமுக சார்பில் திருஉருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 7வது நினைவு தினத்தை முன்னிட்டு நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர கழக அதிமுக சார்பில் கூடுவாஞ்சேரி இ.பி.எதிரில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு முன்னால் அரசு வழக்கறிஞர் கேசவன் தலைமையில் மலர்மாலை அணிவித்து அனுசரிக்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்ச்சியில் நகர மன்ற கவுன்சிலர்களான தேவி தனசேகர், கன்னன்,கலைச்செல்வன், அதிமுக நிர்வாகிகளான பார்கவிவெங்கடேஷ், ஆர்.வி.அருள்குமரன், பினாகபாணி, பப்பு (எ) பிரபு, கோதண்டம், டைலர் கன்னியப்பன், ஹரி, குமரன், பிரபு, அசோக், செல்வமணி மற்றும் ஏராளமான பொதுமக்கள் அம்மாவின் இரங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.