யாருக்காக சிலை கடத்தினீர்கள்!

க.பாலகுரு,
திருத்துறைப்பூண்டி அருகே ஐம்பொன் சிலை கடத்திய இரண்டு பேர் கைது. பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலையை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தனுக்கு சிலை கடத்தல் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக துணை கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படை போலீசார் வாகன சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது மன்னார்குடி அருகே உள்ள பயங்காடு கிராமத்தைச் சேர்ந்த ரஜினி என்கிற பிரபு 46 என்பவரும், மன்னார்குடி சோழபாண்டி பகுதியை சேர்ந்த அழகர் 24 என்பவரும் சேர்ந்து முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் ஒன்றரை கிலோ ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலையை விற்பனைக்காக கடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த சிலையை பறிமுதல் செய்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சிலை கடத்தல் வழக்கில் ஏற்கனவே ரஜினி என்கிற பிரபு சிறைக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
சிலையை முத்துப்பேட்டையில் யாரிடம் விற்பனைக்காக எடுத்துச் சென்றனர் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.