கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 6 நபர்களுக்கு சிறை தண்டனை! பாராட்டிய எஸ்.பி.!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 6 நபர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம். இதையொட்டி சம்மந்தப்பட்ட வழக்கை திறம்பட கையாண்ட போலிசாரை கோவை எஸ்.பி. அவர்கள் பாராட்டியிருக்கிறார்.
கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் அப்புசாமி (65) என்பவருக்கும் அவரது வீட்டின் அருகில் வசிக்கும் நபர்களுக்கும் இடையே இருந்த முன் விரோதம் காரணமாக அப்புசாமி மற்றும் அவரது மனைவியை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக ஆனைமலை காவல் நிலையத்தில் எதிரிகள் 1) வேலுச்சாமி மகன் பழனிச்சாமி (40),2) வேலுச்சாமி மகன் முத்துக்குமார் (42),3) முத்துக்குமார் மனைவி சுமதி (40),4) பழனிச்சாமி மனைவி காந்திமதி (36),
5) பழனிச்சாமி மகள் வனிதா (20),6) வேலுச்சாமி மனைவி வேலாத்தாள் (70) ஆகியோர் மீது ஆனைமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கானது பொள்ளாச்சி உதவி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று குற்றவாளிகள் பழனிச்சாமி மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவருக்கும் தலா 5 வருட சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5000 அபராதமும் மற்றும் மற்ற குற்றவாளிகள் சுமதி (40), காந்திமதி (36), வனிதா (20), வேலாத்தாள் (70) ஆகிய நான்கு குற்றவாளிகளுக்கும் தலா மூன்று வருட சிறை தண்டனை மற்றும் ரூபாய் 2000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.