சார் விபத்து நடக்கும் முன் மின்வயரை சீர்படுத்துங்கள் ப்ளீஸ்!

சார் விபத்து நடக்கும் முன் மின்வயரை சீர்படுத்துங்கள் ப்ளீஸ்!

க.பாலகுரு,

 குடவாசல் அருகே அறுந்த நிலையில் மின்கம்பி, விபத்து நிகழும் முன் மாற்றித்தருமாறு மக்கள் அரசிடம் கோரிக்கை,

   திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே மணக்கால் பகுதியில் சுமார் 20 வீடுகளுக்கு மேல் அமைந்துள்ள வேளாளர் தெரு உள்ளது.

  இந்த தெருவில் தெரு விளக்கு கம்பங்களில் உள்ள உயர் மின்கம்பிகள் அறுந்த நிலையில் தற்காலிகமாக கம்பி சுற்றப்பட்டு உள்ளது..

 கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வேளாளர் தெருவில் உள்ள பாண்டியன் என்பவரது வீட்டு  முன்பு மின்கம்பி அறுந்து விழுந்ததில் அவரது வீட்டு வாசல் கேட் எரிந்துள்ளது. உடன் அக்கம் பக்கத்தினர் மின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மின்மாற்றியை  நிறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில், அறுந்த மின் கம்பியை தற்காலிகமாக மின் ஊழியர்கள் ஒரு கம்பியை வைத்து சுற்றி கட்டி உள்ளனர். மின்கம்பி எந்த நேரத்திலும் அறுந்து விழும் நிலையில் உள்ளது.

 அந்த தெருவில் சிறுவர் சிறுமியர்கள் விளையாடி வருவதாலும் அந்த பகுதியில் அதிக கூரை  வீடுகள் உள்ள நிலையிலும் மின் கம்பி அறுந்து விழுந்தால் பெரும் ஆபத்து நேரிட கூடும்.

 எனவே மின் வாரிய அதிகாரிகள் புதிய மின்கம்பி மாற்றித் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்