தகாத வார்த்தை பிரயோகம்! தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி புகார்!

ஜி.கே.சேகரன்
தூற்றல் விட்டாலும் தூவானம் விடாது என்பதைப் போல அதிமுக மாநாடு நடந்து முடிந்த பின்னரும், பரஸ்பரம் புகார்களின் அடிப்படையில் சற்றே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
திமுக பேச்சாளார் ஒருவர் ஜெயலலிதாவையும், எடப்பாடி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மையப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேற்படி மூவரைப்பற்றியும் மிகவும் அவதூறான வார்த்தைகளால் பாட்டுப் பாடிதிட்டி தீர்த்துள்ளார்.
ஆகவே இது குறித்து குடியாத்தம் அதிமுக நகர செயலாளர் ஜெ.கே.என்.பழனி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது,
தி.மு.க பேச்சாளர் திரு. குடியாத்தம் குமரன் என்பவர் நேற்று 22.08.2023 செவ்வாய்கிழமை அன்று தனது முகநூல் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மறைந்த அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களை குறித்தும். கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை குறித்தும், மிகவும் கேவலமாகவும் கண்ணியம் குறைவாகம் தரம்தாழ்ந்து விமர்சித்துள்ளார்.
இரண்டு கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமான அ.இ.அ.தி.மு.கழகத்தின் தலைவர்கள் குறித்து மிகவும் தரம்தாழ்ந்த வகையில் விமர்சித்துள்ளார். இதனால் மாண்புமிகு அம்மா அவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் மேற்படி வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும் சமீபத்தில் மதுரையில் தமிழ்நாடு வியக்கும்வண்ணம் மிகபிரம்மாண்டமான மாநாட்டினை வெற்றிகரமாக நடத்திய கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் ஏற்கனவே இதுபோன்று பல பதிவுகளை குடியாத்தம் குமரன் அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனால் கழகத்தொண்டர்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து ஏற்கனவே பலமுறை புகார் கொடுக்கப்பட்டுள்ளது? பொதுவாழ்வில் தூய்மையை கடைபிடித்து வாழ்ந்த மாண்புமிகு அம்மா அவர்களின் மீதும் கழக பொதுச்செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் அண்ணன் எடப்பாடியார் மீதும் அவதூறு பரப்பி வரும் குடியாத்தம் குமரன் அவர்களின் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
திமுக எம்.எல்.ஏ.புகார்!
மதுரை அதிமுக மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரை ஆபாசமாக பேசிய அதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுகவினர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அமுலு தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திமுகவினர் மனு அளித்தனர் அந்த மனுவில் கடந்த 20ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினையும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவதூராகவும் ஆபாசமாகவும் பேசி ஆடல் பாடல்களை வெளியிட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அதனை நடத்திய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் அதனை ரசித்தனர் இந்த செயல் பொதுநலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும் எனவே சட்டத்திற்கு புறம்பாக செயல் செய்தவர்களை வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரியும் திமுகவினர் மனு அளித்தனர்
லூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அமுலு தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திமுகவினர் மனு அளித்தனர் அந்த மனுவில் கடந்த 20ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினையும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவதூராகவும் ஆபாசமாகவும் பேசி ஆடல் பாடல்களை வெளியிட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அதனை நடத்திய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் அதனை ரசித்தனர் இந்த செயல் பொதுநலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும் எனவே சட்டத்திற்கு புறம்பாக செயல் செய்தவர்களை வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரியும் திமுகவினர் மனு அளித்தனர் .