லவ் மேட்டர் இளம் எஸ்.ஐ. தற்கொலை முயற்சி! துரிதமாக காப்பாற்றிய பெண் எஸ். ஐ!

M.டெல்லிபாபு,
வாணியம்பாடி நகர காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் நள்ளிரவு காவல் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி. டி.எஸ்.பி விஜயகுமார் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜ்குமார்.
இவரும் அதே மாவட்டத்தி8ன் கடைகோடியில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் எஸ். ஐ. ஒருவரும் 2021ம் ஆண்டில் ஒன்றாக காவலர் பயிற்சியின் போது காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு ராஜ்குமார் பெண் எஸ். ஐ.யிடம் செல்போன் மூலம் வீடியோ காலில் பேசி கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராஜ்குமார் திடீரென நகர காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர் அறைக்கு உள்ளே சென்று தாழிட்டு கொண்டு அவர் வைத்திருந்த சால்வையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதுள்ளார்.
அந்த பெண் எஸ். ஐ உடனடியாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உதவியாளர் ராஜ்குமார் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், கொஞ்சம் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். உடனடியாக காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் அறைக்குள் இருந்த உதவி ஆய்வாளரை கூப்பிட்டுள்ளனர். அவர் அறை தாழிட்டுள்ளதால் காவலர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் தூக்கில் தொங்குவதற்காக தயாராகிக் கொண்டிருந்த ராஜ்குமாரை சக காவலர்கள் மீட்டனர்.
பின்னர் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் வாணியம்பாடி காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் நகர காவல்நிலையத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.
அதன் பின்னர் சில திரைகதையை திரித்து தற்கொலைக்கு “பிட்ஸே” காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இது குறித்து பெண் எஸ். ஐ. அவர்களை செல்போனில் அழைத்து பேசியதில், சார் என்னை ஒரு எஸ் .ஐ. ஆக பார்க்கவேண்டாம், காலையிலிருந்து ஏகப்பட்ட டார்ச்சர், என்னை ஒரு சராசரி பெண்ணாக பாருங்கள் என் பெயரை போடாதீர்கள் என்று சோகமாக பேசினார்.