உங்களை நம்பி நான் பேசுவேன்! அது வேற மாதிரி வருது! பேட்டியை தவிர்த்த அமைச்சர் துரைமுருகன்!

உங்களை நம்பி நான் பேசுவேன்! அது வேற மாதிரி வருது! பேட்டியை தவிர்த்த அமைச்சர் துரைமுருகன்!

 உ.சசிகுமார்,

 பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை வேலூர் மாவட்டம் வந்த போது எம்.பி.கதிர் ஆனந்தின் வீட்டு கதவை எப்போது வேண்டுமானால் தட்டலாம் என்று அமலாக்கத்துறையை மையப்படுத்தி பேசினார்.

 அதற்கு பதிலளிக்கும் விதமாக, அமலாக்கத்துறை என் வீட்டு கதவை தட்ட வேண்டிய கஷ்டமே வேண்டாம். நானே கதவை திறந்து வைக்கிறேன், "அண்ணாமலை என்ன பொருளாதார வல்லுநரா?" என்று அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்தார். அப்போது அவர்க அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமியும் அமர்ந்துக் கொண்டிருந்தார். 

  துரைமுருகனின் இந்த பேட்டியானது ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இடம்பிடித்தது.

  இந்நிலையில் வேலூர் மாநகராட்சி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார். கூட்டம் முடிந்த பின்னர் துரைமுருகனிடம் நிருபர்கள் கேள்வி கேட்க சென்றனர்.

  அப்போது அவர் அங்கிருந்து வேகமாக சென்று கொண்டே பேசினார்.

 "என்னிடம் ஒன்னு கேட்பீங்க.. நானும் சொல்வேன் ஆனால் வேற மாதிரி செய்தி போடுவீங்க. இனி என்கிட்ட எதையும் எதிர்பார்க்காதீங்க" அதுக்கெல்லாம் வேற ஆள பாருங்க. உங்களை நம்பி நான் பேசுவேன். அது வேற மாதிரி வருது. இனி எதுவும் வேண்டாம்" எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்