சைதை துரைசாமியின் மகனை தேடும் பணி நிறுத்தம்!

சைதை துரைசாமியின் மகனை தேடும் பணி நிறுத்தம்!

 உ.சசிகுமார்,

 காருடன் சட்லெஜ் ஆற்றில் மூழ்கிய சைதை துரைசாமியின் மகனை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

  அதிமுக முன்னாள் நிர்வாகியும் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயராகவும் இருந்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தொழிலதிபராக உள்ளார்.  இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இமாச்சல் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். அவருடன் அவரது உதவியாளர் கோபிநாத்தும் சென்றிருந்தார். இதனிடையே லடாக்கில் சுற்றிப் பார்த்துவிட்டு சென்னை திரும்புவதற்காக அங்குள்ள விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டார்.

   காரை டென்சின் என்பவர் ஓட்டிச் சென்றார். கஷங் நலா பகுதி அருகே கார் சென்ற போது டிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் நிலைத்தடுமாறிய கார் அங்கிருந்த பள்ளத்தாக்கில் பாய்ந்து சட்லெஜ் ஆற்றில் விழுந்தது.

  இதுகுறித்த தகவலின் பேரில் போலீஸா£, தீயணைப்புப் படையினர் ஆகியோர் வந்து அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் ஓட்டுநர் டென்சினின் உடல் கைப்பற்றப்பட்டது. உதவியாளர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

   ஆனால் வெற்றி துரைசாமியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை தேடும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் கடும் பனிமூட்டம் காரணமாக அவரை தேடும் பணியை மீட்புப் படையினர் இன்று மாலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.