நான் 3 லட்சம் கொடுக்கிறேன்...எம். எல் .ஏ சார் நீங்களும் கொஞ்சம் கொடுங்கள்! திருவண்ணாமலை எம்பி பேச்சு!,

நான் 3 லட்சம் கொடுக்கிறேன்...எம். எல் .ஏ சார் நீங்களும் கொஞ்சம் கொடுங்கள்! திருவண்ணாமலை எம்பி பேச்சு!,

ஜி.கே.சேகரன்,

 நான் 3 லட்சம் கொடுக்கிறேன்...எம். எல் .ஏ சார் நீங்களும் உங்கள் நீதியிலிருந்து கொடுங்கள் என்று திருவண்ணாமலை எம்பி சிஎன் அண்ணாதுரை பேசினார். 

 ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட பழங்குடியின மாணவியர் தங்கும் விடுதியை திறப்பு விழாவிற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு மலைவாழ் மக்கள் பாரம்பரிய நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை அத்தனூவூர் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட கட்டிட திறப்புவிழாவுக்கு திருவண்ணாமலை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை வருகை தந்தார்.

   அப்போது அவரை மலைவாழ் மக்கள் பாரம்பரிய நடனமாடி உற்சாகமாக வரவேற்றனர்.

  அத்தனாவூர் மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள பழங்குடியின மாணவியர்கள் தங்கும் விடுதி கட்டடம் மற்றும் ஏலகிரிமலை படகு இல்லம் அருகே நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.16.55 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்களின் தலைமையிலும், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.என்.அண்ணாதுரை அவர்கள், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.க.தேவராஜி அவர்கள் ஆகியோர் முன்னிலையிலும் திறந்து வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது.

   தொலைதூர கிராமங்களிலிருந்து பள்ளிக்கு வரும் பழங்குடியின மாணவியர்கள் இடைநிற்றலை தவிற்கும் பொருட்டு, பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அத்தனாவூர் மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில் ரூ.135 இலட்சம் மதிப்பிலான 80 மாணவியர்கள் தங்கி பயிலும் வசதி கொண்ட, பள்ளி மாணவியர்கள் தங்கும் விடுதி கட்டடம் கட்டப்பட்டுள்ளன.

 இவ்விழாவில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.என்.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மலை கிராம மாணவர்கள் தங்கி பயில்கின்ற மாணவியர் விடுதியை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

  இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் துறை அலுவலர் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்தும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்தும் இந்த விடுதியில் மாணவர்கள் தங்கி பயில்வதற்கு தேவையான கட்டில் மற்றும் மர உபகரண்கள் போன்ற அனைத்து பொருட்களும் தேவைப்படுகிறது என்று கோரிக்கை வைத்துள்ளார்.

  உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நான் ரூ.3 இலட்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளேன். அதைப்போல் விடுதிக்கு தேவையான பொருட்கள் என்னென்ன தேவைகள் உள்ளது என்பதை பட்டியலிடப்பட்டு இந்த விடுதிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மாணவர்கள் தங்கி பயில்வதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

  மாநகரம் நகரங்களில் இருக்கின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மலை கிராமங்களில் உள்ள மாணவர்கள் முழுவதுமாக அரசினுடைய திட்டங்களை பெற்று அவர்களது வாழ்க்கையில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பணி செய்து கொண்டிருக்கின்றோம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடைமுறைப்படுத்துகின்ற அனைத்து திட்டங்களும் பெரும்பாலான திட்டங்கள் தாய்மார்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறார் அதிலும் மாணவர்களின் நலனில் அக்கறை இருக்கின்ற அரசு தான் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, மேலும் ஒவ்வொரு நிதியாண்டிலும் பள்ளிக் கல்வித் துறைக்கு என்று ரூபாய் 45,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

  அது மட்டும் இல்லாமல் பழங்குடியின மாணவர்களுக்கு தனியாகவும் கல்லூரி மாணவர்களுக்கு தனியாகவும் நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலமாக மாறிக்கொண்டு வருகிறது. விரைவில் தமிழ்நாடு மாநிலம் கல்வியில் முதல் மாநிலமாக வருகின்ற அளவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முயற்சி செய்து வருகிறார். அவர் வழியில் நாங்கள் எல்லோரும் பணி செய்து வருகிறோம்.

  இந்த வாய்ப்பினை பழங்குடியின மாணவ, மாணவியர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் உயாந்த நிலையை அடைய வேண்டும் என வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்விழாக்களில் பழங்குடியின நல திட்ட அலுவலர் திரு.செந்தில்குமார், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) திரு.செந்தில்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,திருப்பத்தூர் மாவட்டம்.