கள்ளச் சாவி போட்டு மதகை திறந்த மணல் களவாணிகள்!

கள்ளச் சாவி போட்டு மதகை திறந்த மணல் களவாணிகள்!

 ம.முருகன்,

  செங்கம் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்  ஹரிஹரன் அவர்களின் அடாவடியான பேச்சை கண்டித்தும், மணல் திருடர்களுக்கு ஆதரவாக செயல்படுவதையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உழவர் உரிமை இயக்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 ஏன் இந்த ஆர்ப்பாட்டம் என்பதைப் பார்ப்போம்,

   கடந்த வாரம் செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு பாலத்தின் எதிரே அமைந்துள்ள தடுப்பணையின் மதகை மணல் திருடர்கள் கள்ளச்சாவி போட்டு தேங்கி இருக்கும் நீரை திறந்து விட்டு சென்றனராம்¢. இதனை கடந்த வாரமே நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்  ஹரிஹரனிட கூறிபோதே வட்டாட்சியரிடம் புகார் கொடு, கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் கொடு காவல்துறையிடம் புகார் கொடு என்று தன் கடமையை செய்யாமல் தட்டிக்கழிக்க முற்பட்டிருக்கிறார்.

 அதற்கு, நாங்கள் ஏன் அவர்களிடம் புகார் தர வேண்டும்? உங்களின் வேலை என்ன என்று உழவர் உரிமை இயக்கம் கேட்ட பிறகு காவல்துறைக்கு கடிதம் வைக்கிறேன் என்று சொல்லி நழுவியிருக்கிறார்.

  மேற்படி தடுப்பணையில் உள்ள நீரை நம்பி சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு நெல் நாற்று விட்டு நடவு செய்ய தயார் நிலையில், ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை மணல் திருடர்கள் மதகை திறந்துவிடப்பட்டு அணையில் உள்ள நீரை சுத்தமாக வடித்துவிட்டனர்.

   இதனால் சில விவசாயிகளின் ஓட்டிய சேறு காயும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயி ஒருவர் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஹரிஹரனை தொடர்பு கொண்டு, நாங்கள் கூறிய புகார் மீது நடவடிக்கை என்ன ஆச்சு என்று கேட்டுள்ளார்.

 அதற்கு அவர்,  காவல்துறைக்கு கடிதம் வைத்துவிட்டேன் தன் வேலை முடிந்துவிட்டது போல பேசியுள்ளார். கடிதம் வைப்பதோடு உங்கள் வேலை முடிந்துவிட்டதா இதற்கு தான் சம்பளம் தரப்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய விவசாயியை ஒருமையில் தரக்குறைவாக பேசினார் ஹரிஹரன்.

  எனவே அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக தொடர்ந்து மணல் திருடர்களுக்கு ஆதரவாக செயல்படுவதும், விவசாயியை ஒருமையில் பேசியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்த உழவர் உரிமை இயக்கம் திட்டமிட்டுள்ளது.

 இது குறித்து விவசாயி ஒருவர் தெரிவிக்கையில், மதகை திறந்துவிட்ட மணல் திருடர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் செங்கம் நீர்வளத்துறை ஊழியர்கள் யாரும் இல்லை என்று கணக்கில் கொண்டு விவசாயிகள் நாங்களே எங்கள் நீர் மேலாண்மையை கவனித்துக்கொள்ளும் விதமாக குப்பனத்தம் அணையின் மதகை திறந்து எங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்துகொள்ளவும் முடிவு செய்துள்ளோம் என்கிறார்.