விசிகவினர் பங்கேற்ற போராட்டத்தின் போது திருமலை திருக்குடை சென்றதால் பதற்றம்!

கு.அசோக்,
விசிகவினர் பங்கேற்ற போராட்டத்தின் போது, அவ்வழியே திருமலை திருக்குடை சென்றதால் பதற்றம் ஏற்பட்டது. நல்ல வேளையாக போலீசார் தலையிட்டு அதை சமாளித்தனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 16 (எ) பயன்படுத்தி எஸ்.சி.எஸ்.டி ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் அய்க்கியப் பேரவை ஆர்பாட்டம் நடத்தியது.
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அரசு ஊழியர் அய்க்கியப்பேரவையின் சார்பில் ஆர்பாட்டமானது மாவட்டத்தலைவர் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில்கிருஷ்ணகிரி,தர்மபுரி,வேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் பங்கேற்று இந்திய அரசமைப்பு சட்டம் பிரிவு 16 (எ) படி எஸ்,சி.எஸ்.டி ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படியில் தமிழக அரசு பதவி உயர்வு அளிக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழக அரசு துறைகளில் எஸ்.சி.எஸ்.,டி பின்னடைவு காலிபணியிடங்கள் 11 ஆயிரம் உள்ளதை உடனடியாக நிரப்ப வேண்டும்.
அரசாணை 152 திரும்ப பெற்று தூய்மைபணியாளர்களை அரசு நேரடியாக நியமனம் செய்ய வேண்டும்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதில் விடுதலை சிறுத்தைகள் மாநில அமைப்பு செயலாளர் நீல சந்திரகுமார், மாவட்ட செயலாளர் பிலிப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது திருமலை திருப்பதிக்கு சுவாமி ஊர்வலமாக திருக்குடை கொண்டு செல்லும் போது சனாதனத்தை வேர் அறுப்போம் என கோஷங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
அதற்குள் போலிசார் தலையிட்டு பிரச்சனை எழாமல் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில் இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஒரே நேரத்தில் அனுமதியளிக்கப்பட்டது குறித்து சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.