அதிமுகவில் மாநகர செயலாளராக அப்புபால் பாலாஜி அறிவிப்பு!

அதிமுகவில் மாநகர செயலாளராக அப்புபால் பாலாஜி அறிவிப்பு!

ம.பா.கெஜராஜ்,

 அ.தி.மு.க.வில் வேலூர் மாநகர செயலாளராக வி.எம். அப்புபால் பாலாஜி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னிர் செல்வம் வெளியிட்டிருக்கிறார்.

 வேலூரில்  சமூக பணிகள் பலவற்றில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் பணிகள் பலவற்றை ஆற்றி வருபவர் அப்பு பால் பாலாஜி.

 இதற்கு முன்னர் அவர் அ.ம.மு.க.வில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக தாய் கழகமாம் அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். தலைமையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

 இந்நிலையில் அவருக்கு தலைமை வேலூர் மாநகர செயலாளர் பதவியை அளித்துள்ளது. இது பற்றின தகவல் வெளியான நிலையில் பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்