சக்தியம்மா சார்பில் கல்வி உதவி பெறும் நீங்கள் பிறருக்கு உதவுங்கள்! காவல்துறை முன்னாள் தலைவர் பேச்சு!

சக்தியம்மா சார்பில்   கல்வி உதவி பெறும் நீங்கள் பிறருக்கு உதவுங்கள்! காவல்துறை முன்னாள் தலைவர் பேச்சு!

 கு.அசோக்,

 அரியூர் தங்ககோவில் சார்பில் 600 மாணவ,மாணவிகள் உயர் கல்வியை பெற ரூ.1. 50 கோடி  கல்வி உதவித்தொகையை தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மா வழங்கினார் -  வித்யா நேத்ரம் திட்டம் மூலம்  மாணவர்கள் படித்து நல்ல நிலைக்கு வந்து சமுதாயத்திற்கு சேவையாற்ற வேண்டும் என முன்னாள் காவல்துறை தலைவர் பாலசந்தர் விழாவில் பேச்சு

 வேலூர்மாவட்டம், அரியூர் தங்ககோவில் வளாகத்தில் தங்க கோவிலின் சார்பில் உயர் கல்விக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் வித்யா நேத்ரம் விழா தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மா தலைமையில் நடைபெற்றது.

 இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் காவல்துறை தலைவர் பாலசந்தர் பங்கேற்று குத்துவிளக்கேற்றினார்.

 இதில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட பல உயர் கல்வியை பெறுவதற்கான கல்வி உதவி தொகை 600 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

 அதன் மதிப்பு  ரூ.1. 50 கோடி ஆகும்.

திரளான மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்ற இவ்விழாவில் முன்னாள் காவல்துறை தலைவர் பாலசந்தர் பேசுகையில் இங்கு சக்தியம்மா சார்பில் நீங்கள் உயர் கல்வி உதவியை பெறுகின்றீர்கள் நீங்கள் அதனை கருத்தில் கொண்டு படித்து நல்ல நிலைக்கு வந்து சமூதாயத்திற்கு சேவையாற்ற வேண்டும் பிறருக்கு உதவியை செய்ய வேண்டுமென பேசினார்.