சூதாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் போலீசில் பிடிபட்டார்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவா ¢உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரிய குறும்பத்தெரு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன். இவர் அப்பகுதியை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட நபருடன் தொடர்ந்து வெப்பாலம்பட்டியில் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் அப்பகுதியில் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சூதாட்டத்தில் சிலர் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், பார்த்திபன், முத்து, பெருமாள், பிரசாந்த், தங்கராஜ், கோவிந்தராஜ், சசிதர் முருகன் உள்ளிட்ட 10 பேரை சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர்.
பின்னர் கிராமிய காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் அப்பகுதியில் தொடர்ந்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேற்படி 10 பேர் மீதும் வாணியம்பாடி தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
ஊராட்சி மன்றத் தலைவரே சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.