ரயிலில் சில்மிஷம் செய்த வடக்கன்ஸ் கைது!

கு.அசோக்,
ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயற்சி செய்ததாக கூறி நான்கு பேர் கைது செய்து அரக்கோணம் ரயில்வே போலீஸ் சார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
அசாம் மாநிலம் கௌஹாத்தியில் இருந்து அரக்கோணம் வழியாக பெங்களூரு செல்கிறது கௌஹாத்தி எக்ஸ்பிரஸ். இந்த ரயிலின் பொது பெட்டியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சில பெண்கள் மற்றும் பீகாரைச் சேர்ந்த இளைஞர்கள் உள்பட பலர் பயணம் செய்தனர்.
அந்த ரயில் பெட்டியில் இருந்த பீகாரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் 19 வயது இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் மற்றும் அவரது உறவினர்கள் அந்த இளைஞர்களை தட்டிக் கேட்டுள்ளனர். மேலும் இது குறித்து சிலர் ரயில்வே கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே போலீசார், ரயில் நிலையத்தில் தயாராக இருந்தனர். அப்போது அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்து நின்ற கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் பொது பெட்டியில் ஏறி நடந்த சம்பவம் குறித்து பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.
அந்த இளைஞர்கள் ரயிலில் தகராறு செய்தது இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பாக 4 இளைஞர்களை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் பீகார் மேற்குவங்க மாநிலங்களை சேர்ந்த முகமத் ஹக்கீம் 20, மஸ் ஹா ரூல் 25, ஜூல் பாஹர் 23, தரமே சர்க்கார் 19 என்பது தெரிய வந்தது.
மேலும் பெங்களூருவில் வேலைக்கு செல்லும் அவர்கள் மீது எழுந்த புகாரி¢ பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.