ரயிலை மறிப்பாராம் அதிமுக எம்.எல்.ஏ.! தேர்தல் வருதே அதான்!

கு.அசோக்,
வரும் நவம்பர் 16ஆம் தேதி அன்று மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உறுமியுள்ளார்.
அரக்கோணம் ரயில்வே லைனில் குறுக்கே ஆங்கிலேயர் காலம் முதல் இரட்டை கண் சுரங்க பாதை மக்கள் பயன்பாட்டுக்கு இருந்து வந்தது.
நாளடைவில் வாகன போக்குவரத்து அதிகரித்ததால் பொதுமக்கள் வசதிக்கேற்ப மூன்றாவது கண் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
ஆனால் போதிய பராமரிப்பு செய்யப்படாத காரணத்தினாலும் வடிகால் கால்வாய்கள் சிறிய முறையில் அமைக்கப்படாததாலும் மூன்றாவது கண் சுரங்கப்பாதை மக்களுக்கு பயனற்ற நிலையில் மாறியது.
இதனால் பொதுமக்கள் வாகன நெருசலில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரங்க பாதையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அதிமுக துணை கொரடாவும் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினருமான சு.ரவி விரைவில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
அதன்படி நேற்று அரக்கோணம் பழனி பேட்டை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு அதிகாரிகள் ரெஸ்பான்ஸ் அளிக்காத பட்சத்தில் வரும் நவம்பர் மாதம் பதினாறாம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போகிறாராம்.
அதுசரி தேர்தல் வரப்போகிறதே?