தொண்டர்களுடன் பிணைந்திந்த வாத்தியார் எனும் எம்.ஜி.ஆர்!

தொண்டர்களுடன் பிணைந்திந்த வாத்தியார் எனும் எம்.ஜி.ஆர்!

ம.பா.கெஜராஜ்,

சென்னை சத்யா ஸ்டூடியோவில் உரிமைக்குரல் படப்பிடிப்பில் வாத்தியாரைக் காண, (எம்.ஜி.ஆர்.) தேனி மாவட்டத்திலிருந்து சண்முகவேலு என்ற தீவிர ரசிகர் காணச் சென்ற போது, ""என் கூட நடிக்கிறீயா...'' எனக்கேட்டார் வாத்தியார்.

 "உங்க பக்கத்தில் நிற்கும்போதே, எனக்கு கை, கால் உதறுது; உங்க அன்பே போதும்,' என, அந்த ரசிகர் கூறியதும், அவரைக் கட்டிப்பிடித்து, போட்டோ எடுக்கச் சொன்னார் வாத்தியார்.

 பின்னர், அருப்புக்கோட்டை வறட்சி நிதி வசூலுக்கு மதுரை தமிழ்நாடு ஓட்டலில் வாத்தியார் தங்கியிருந்த போது, வாத்தியாரைச் சந்திக்க, அந்த ரசிகர் மனைவி குழந்தைகளுடன் காத்திருந்தார்.நிறைய பார்வையாளர்கள் இருந்தபோதும், சண்முகவேலுவை அடையாளம் கண்டு, உதவியாளரிடம் கூறி அவரை அழைத்து வரச்செய்தார்.

 அந்த ரசிகரின் இரு மகள்களுக்கு சத்யா, ராணி என பெயரிட்டு, "சத்யா, எனது தாய், ராணி எனது அண்ணியார்,' எனக் கூறி, அவர் மனைவியிடம் நலம் விசாரித்து, 'என்ன உதவி வேண்டுமானாலும், இந்த அண்ணனிடம் தயக்கமில்லாமல் கேளுங்கள் என்றார்.

 மகிழ்ச்சியோடு வெளியே வந்த சண்முகவேலுவின் மனைவி மிகவும் நெகிழ்ந்து, "கட்சிக்காக, சொத்துக்களை நீங்கள் விற்ற போது, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் இந்த கூட்டத்தில், உங்களை அடையாளம் கண்டு பேசி நமக்கு உதவியும் செய்கிறேன் என்றால், அவருக்காக நம் சொத்துக்களை இழந்தாலும், பரவாயில்லை,' என்று கண்ணீருடன் கூறினார்.

 வெளியே தெரியாத இப்பேர்ப்பட்ட பகட்டில்லா பக்தர்கள் இன்னும் நம்மிடையே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

 வாத்தியாரின் மனிதநேயம் 'நமக்குத் தெரிந்தது கையளவு, தெரியாதது கடலளவு'.

கருத்து:- அப்போதெல்லாம் தொண்டர்கள் கட்சிக்கு சொத்துக்களை விற்று நிதி கொடுத்துள்ளார்கள். அப்படி வளக்கப்பட்ட கட்சி இன்றைக்கு எப்படியிருக்கிறது என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடலாம் அல்லவா?

தகவல்கள் வழங்கிய முகநூலாளருக்கு மிக்க நன்றி!