உடைந்து போன டிரேக்களில் ஆவின் பாலா? கலெக்டர் அதிரடி!

ஜி.கே.சேகரன்,
ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்த போது உடைந்து போன டிரேக்களில் பால் பாக்கெட்டுகளை அனுப்ப வேண்டாம் அதனை உடனடியாக மாற்றவேடும் எனவும், விழாக்காலங்களில் பால் உற்பத்தியை நிறுத்த கூடாது என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வேலூர்மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்பு லெட்சுமி ஆதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார்.
இதில் ஆய்வகம், பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யும் இடம், நெய், ஐஸ்கிரீம், பால் பவுடர் உற்பத்தி செய்யும் இடங்களையும் அவர் ஆய்வு செய்தார்.
இங்கு உற்பத்தி செய்யபடும் பால் பாக்கெட்டுகளை வேன் கள் மூலம் ஏற்றி செல்வதையும் கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்த போது பால் எடுத்து செல்லும் டிரேக்கள் உடைந்த டிரேக்களில் பால் பாக்கெட்டுகள் நிரப்பியதையும் கண்டுபிடித்தார்.
உடைந்த டிரேக்களில் பால் பாக்கெட்டுகளை அனுப்ப கூடாது அவைகளை மாற்றி தர வேண்டும் என உடனடியாக உத்தரவிட்டார். மேலும் விழாக்காலங்களில் ஆட்கள் பற்றாக்குறை என கூறி பால் உற்பத்தியை எக்காரணம் கொண்டும் நிறுத்த கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் இந்த ஆய்வின் போது ஆவின் நிர்வாக துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.