ஊரீசு கல்லூரியில் பயின்ற முன்னாள் ஜனாதிபதிக்கு மரியாதை செய்த முதல்வர்! சுயநலமாய் ஆர்பாட்டம் நடத்திய ஆசிரியர் சங்கத்தினர்!

கு.அசோக்,
வேலூர்மாவட்டம்,வேலூரில் மிகவும் ஊரீசு கல்லூரியில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்றார். அவரின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதியை அரசு ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறது.
அந்த வகையில் ஊரீசு கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் உள்ள ஆனி கமலா ப்ராளன்ஸ் தலைமையில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் திரு உருவ படத்திற்கு ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் மாலை அணிவித்து அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
இதில் நிதி ஆளுநர் காலேப், முனைவர் தேமாங்கனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்று பேசினார்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம்,
அதே போல் சோளிங்கரில் வ,.உ.சி அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தினவிழா மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வ.உ.சி தமிழ் மன்றம் சார்பில் ஆசிரியர் தினவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வ.உ.சி. தமிழ் மன்றம் நிறுவனர் தியாகராஜன் தலைமை தாங்கினார். விஸ்வகர்மா கோபி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் ஏ.எல் சாமி கலந்து கொண்டு மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து ஆசிரியர் தினம், வ.உ.சி. சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்து பேச்சுப்போட்டி, கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.
சோளிங்கர் வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து முத்து மணி மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆசிரியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் வாசு, உதவும் உள்ளங்கள், சிறு துளி அமைப்பு, அகவை முதிர்ந்த தமிழ் சான்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மேலும், சோளிங்கர் வட்டம் ஒழுகூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் வேலாயுதம் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்களுக்கு செங்காடு கிராமம் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் மரக்கன்றுகளை வழங்கினார். அப்போது, மரம் நடும் அறமே மாபெரும் அறம் என்ற உறுதிமொழியை அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து எடுத்துக் கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமை படை மற்றும் பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சார்பாக மேற்கொள்ளப்பட்டது.
நாடெங்கிலும் ஆசியர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் சார்பில் ஆர்பாட்டம் நடத்தி தங்கள் சுயநலத்தை வெளிப்படுத்தினர்..
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆர்பாட்டம் மாவட்டத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்பாட்டமானது நடந்தது இதனை மாநில துணை தலைவர் இளங்கோ துவங்கி வைத்தார்.
இதில் ஜனார்த்தனன் ,சேகர்,வேலு,ராமமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனா.¢
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் தேர்தல் அறிக்கையில் திமுக பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரபடும் என தேர்தல் வாக்குறுதி அறிவித்திருந்தது,
மூன்றாண்டுகளாகியும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வராததால் ஆசிரியர் அரசு ஊழியர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவே ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ஆம் தேதியான இன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடந்தது.
இதில் திரளான ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.