இஸ்ரேல் மீது ஹமாஸ் போர்! 50 ஆண்டு கால வரலாறு!

ம.பா.கெஜராஜ்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் போர் மூண்டுள்ள நிலையில் அதன் பின்னணியில் 50 ஆண்டு கால வரலாறு இருக்கிறது.
07.10.1973 ல் இஸ்ரேல் மீது எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகள் திடீர் தாக்குதல் நடத்திய பின் சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து, பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஒரு பெரிய தாக்குதலை சனிக்கிழமை நடத்தினர்.
ஹமாஸின் இந்தத் தாக்குதல் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், யூதர்களின் விடுமுறை தினமான ஷபாத் அன்று நடந்தது. இதற்கு ஹமாஸ் அமைப்பு 'அல்-அக்ஸா ஸ்டார்ம்' என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
1973ல் நடந்த அந்தத் தாக்குதல் அக்டோபர் போர் என அழைக்கப்படுகிறது. அந்தப் போர் தான் அரபு மற்றும் இஸ்ரேல் தரப்புகளுக்கு இடையே நடந்த முதல் போர் அல்லது யோம் கிப்பர் போர் என்று அறியப்படுகிறது.
இந்தச் சண்டையில், சிரியா கோலன் குன்றுகளிலிருந்து இஸ்ரேலைத் தாக்கியது. எகிப்து சூயஸ் கால்வாயிலிருந்து இஸ்ரேலைத் தாக்கி விரைவாக இஸ்ரேலுக்குள் நுழையத் தொடங்கியது.
இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியைக் கேட்டபோது, சோவியத் யூனியன் எகிப்து மற்றும் சிரியாவின் பக்கம் நின்றது. மேலும் போர் மிகத் தீவிரமாக நடைபெற்றது.
பல நாட்கள் நீடித்த இந்த மோதலுக்குப் பிறகு, சினாய் மாகாணத்தில் இருந்து இஸ்ரேல் தனது ராணுவத்தை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று.
இந்நிலையில் தற்போது பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பிரச்னையானது மிகவும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் மீது 5000-7000 குண்டுகள் வரை வீசி ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஜெருசலேமில் இருந்து நேற்று நள்ளிரவு முதல் இஸ்ரேலில் உள்ள படைவீரர்கள் குறிப்பாக ராணுவ வீரர்கள் காசா பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏனென்றால் அங்குதான் ஹாமாஸ் தீவிரவாதிகள் இருக்கின்றனர்.
முதல் தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த 70 பேரும், பாலஸ்தீனத்திலிருந்து 198 பேரும் மரணமடைந்துள்ளார்கள் என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தியை வெளியிட்டுள்ளது.
காசா பகுதியை பொறுத்தவரை ஜெருசலேமின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்குதியானது தீவு நகரை போல ஹாமாஸ் இயக்கத்தினரின் கட்டுபாட்டில் இருக்கிறது. அங்கிருந்துதான் இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக தாக்குதலும் நடத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக அக்டோபர் 7ஆம் தேதி 1973-ல் யூதர்களின் காலண்டரை பொருத்தவரை இத்தேதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல் நடத்தப்பட்ட நாள் அவர்களின் புனித நாளாக கருதப்படுகின்றது.
தீவிரவாதிகளுக்கும் ஒரு நாட்டுக்கும் இடையே நடக்கும் இந்த போர் தீவிரமடைந்தால் உலகுக்கு இரு பெரு