ஊட்டியில் ஆளுநர்!

ஊட்டியில் ஆளுநர்!

  ம.பா.கெஜராஜ்,

தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி 5 நாள் பயணமாக இன்று ஊட்டிக்கு சென்றார். சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் புறப்பட்ட ஆளுனர், மதியம் கோவை விமான நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து கார் மூலம் அவர் மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக மாலையில் ஊட்டி சென்றார்.

 ஊட்டியில் ராஜ்பவன் மாளிகையில் வருகிற 9-ந் தேதி வரை அவர் ஊட்டியில் தங்கியிருக்கிறார். அங்கு அவர் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

 ஏற்கனவே கடந்த மாதம் ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சி நிறைவு விழாவில் ஆளுனர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

   இந்நிலையில் ஆளுநர் 9-ந் தேதி காலை ஊட்டியில் இருந்து கோவை வந்து விமானம் மூலம் சென்னை செல்ல அவர் திட்டமிட்டு இருக்கிறார்.