இதையெல்லாம் அரசு அலுவலர்களுக்கு கொடுக்கனுமாம்! போராட்டம் நடத்துறாங்களே?

கு.அசோக்,
இராணிப்பேட்டையில் வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இராணிப்பேட்டைமாவட்டம், இராணிப்பேட்டை வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் எதிரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஒட்டுமொத்த தற்செயல்விடுப்பு எடுத்து தர்ணா போராட்டாம் நடத்தினர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்துவரும் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கும் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய பணிப்பாதுகாப்பு அளித்திடுமாறும், வருவாய்த்துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடைபெறும் பட்சத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிட சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை உடன் நிறைவேற்றிட வேண்டும் எனவும் கோரினர்.
பொதுமக்களுக்கான பணியை மேலும் சிறப்பாக செய்திட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப்பணியிடங்களையும் விரைந்து நிரப்பிட வேண்டும் வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதீதமான பணி நெருக்கடி ஏற்படுத்துவது ' தொடர்பாகவும், குறிப்பாக களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வது தொடர்பாகவும், ஏற்கனவே அரசு செயலாளர் அவர்களிடம் முறையீடு அளித்துள்ள நிலையில், இதற்கான தீர்வினை விரைந்து வழங்கிட வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத்துறை ஆகியவற்றில் பணிபுரிந்து 'வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும்.
தமிழக அரசுத் துறைகளில் 25% பணியிடங்கள் கருணை அடிப்படை நியமனத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நியமனம் மேற்கொள்ளப்பட்டு வநத நிலையில் திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி கருணை அடிப்படை பணிநியமனத்திற்கான உச்சவரம்பு 25% லிருந்து 5% ஆக குறைத்து மறுநிர்ணயம் செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டு, கருணை அடிப்படை பணிநியமனம் என்பதே முற்றிலும் தடைபடும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வினால் பணியிலிருக்கும் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படை பணி நியமனம் வழங்குவதில் மிகுந்த தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தின் சூழல் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படை பணி நியமனத்திற்கு உச்ச வரம்பு 5% என குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை இரத்து செய்து மீண்டும் 25% ஆக உயர்த்தி வழங்கிடவும், கிராம உதவியாளர்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடங்களை வழங்கிடவும் வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலைகளிலும், வெளிமுகமை, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும். மேலும், அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் ஜூலை 1ம் நாளை (பசலி ஆண்டின் தொடக்கம்) 'வருவாய்த்துறை தினமாக' அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களின் தன்னலம் கருதா பணியை அங்கீகாரம் செய்யும் வகையில் மாநில அளவில் அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.