குளு குளு நீரில் ஆட்டம் போடும் சிறுவர்கள்!

குளு குளு நீரில் ஆட்டம் போடும் சிறுவர்கள்!

கு.அசோக்,

  வாலாஜா  அருகே கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் கிராமத்தில் வசிக்கும் சிறார்களின் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

 இராணிப்பேட்டை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் 106 டிகிரி வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் பகல் நேரத்தில் வீடுகளில் இருக்க முடியாத சூழல் நிலவி வருவதால் கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் பெரும்பாலானோர் விவசாய கிணறுகள் மற்றும் ஆறு, குளம், குட்டை போன்றவற்றில் நீராடி கோடை வெப்பத்தை தனித்து வருகின்றனர்.

  அந்த வகையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் வசிக்கும் சிறார்கள் சிறிய ரக நீர் தொட்டியில் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர்.