மலையேறிய வேலூர் ஆட்சியர்! பரபரப்பு ஆய்வு!

மலையேறிய வேலூர் ஆட்சியர்! பரபரப்பு ஆய்வு!

 ம.பா.கெஜராஜ்,

 வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அப்புக்கல் ஊராட்சியில் உள்ள அப்புக்கல், பண்ணையாரதிப்பை,  மாணிக்ககொல்லை,  யாதவபுரம் மற்றும் ஏரிகொல்லை  ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.,   அவர்கள்  ஆய்வு செய்தார்.

 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் மகளிர்களிடம் பணி குறித்தும், பணிக்கான ஊதியம் சரியான முறையில் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

 இந்த ஆய்வின்போது அணைக்கட்டு வட்டாட்சியர் திருமதி.வேண்டா,  அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சுதாகர்,  திருமதி.சாந்தி,  அப்புக்கல் ஊராட்சி மன்ற தலைவர் (பொ) திரு. சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி. சபரி சோபனா உட்பட பலர் உடனிருந்தனர்.                

   அணைக்கட்டு வட்டாட்சியர் திருமதி.வேண்டா,  அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சுதாகர்,  திருமதி.சாந்தி,  அப்புக்கல் ஊராட்சி மன்ற தலைவர் (பொ) திரு. சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி. சபரி சோபனா உட்பட பலர் உடனிருந்தனர்.                

 திங்கள் மனு,

மேலும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லெத் கூட்டரங்கில்  நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க துறைச் சார்ந்த அலுவலர்களிடம் உத்தரவிட்டார்.

5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,30,000 மதிப்பிலான பேட்டரி பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலிகளையும்,

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, இயற்கை மரண ஈமச்சடங்கு உதவிதொகை மற்றும் விபத்தில் மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ஆர்த்தி மற்றும் தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் திரு.தனஞ்செயன் மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.வசந்த ராம்குமார்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 குழந்தைகள் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதி

  உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அலுவலர்கள் அனைவரும்  குழந்தைகள் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

  மேலும், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

  குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு பள்ளி இடைநின்று குழந்தை தொழிலாளர்களாக இருந்த மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி பள்ளியில் சேர்ந்து பயில அறிவுறுத்தினார்.

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.விஜயராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  மஞ்சப்பை

  மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தடை செய்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடைப்பெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற 11 மாணவ-மாணவிகளுக்கு பரிசு தொகையும் பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

 சுற்று சூழல் பரிசு

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசுடன் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருதிற்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலையை  மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ஆர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் திருமதி.சுஸ்மிதா , திருமதி.சௌந்தர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.