நாய்க்கு இறையாகும் காஸா மக்கள்! கல்லரையாக மாறிய அல்-ஷிஃபா மருத்துவமனை!

ம.பா.கெஜராஜ்,
காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனை தற்போது பெரிய கல்லரையாக மாறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனை 'கிட்டத்தட்ட ஒரு கல்லறை ஆகிவிட்டதாக' தெரிவித்துள்ளது.
இது பற்றின விவரம் வருமாறு,
காஸாவின் வடக்கில் அமைந்துள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில்தான் ஹமாஸின் சுரங்கப்பாதைகளின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் இயங்குகிறது என்று இஸ்ரேல் கூறுகிறது. இதனால் இந்த மருத்துவமனை கடந்த சில நாட்களாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தீவிரமான தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.
ஆனால், இஸ்ரேலின் இந்த குற்றச்சாட்டை ஹமாஸும் அல்-ஷிஃபா மருத்துவமனையும் மறுத்துள்ளன.
ஆனால் அந்த மருத்துவமனை மற்றும் அதன் பக்கவாட்டை சுற்றிலும் இஸ்ரேலிய படைகள் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதனால் "மருத்துவமனையைச் சுற்றியும் சடலங்கள் கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தவோ, புதைக்கவோ அல்லது பிணவறைக்கு எடுத்துச் செல்லவோ முடியாத சூழ்நிலை உள்ளது," "மருத்துவமனை வேலை செய்யவில்லை. இது கிட்டத்தட்ட ஒரு கல்லறை ஆகிவிட்டது,"
அழுகிய உடல்களைப் புதைப்பதறகாக மருத்துவமனையை விட்டு வெளியேற இஸ்ரேலிய அதிகாரிகள் இன்னும் அனுமதி வழங்காததால், நாய்கள் இப்போது மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து சடலங்களை உண்ணத் தொடங்கியுள்ளதாகவும் மருத்துவமனையின் மேலாளர் மருத்துவர் மொஹமட் அபு செல்மியா செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்திருக்கிறார்.
மின்தடை காரணமாக இன்க்யுபேட்டர்களில் வைக்கப்பட முடியாமல் இருக்கும் டஜன் கணக்கான குறைமாத குழந்தைகளின் நிலை குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன. அவற்றில் ஏழு குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துவிட்டது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மூத்த ஆலோசகர் மார்க் ரெகெவ், குழந்தைகளை வெளியேற்றுவதற்கு இஸ்ரேல் 'நடைமுறை தீர்வுகளை' வழங்குவதாகவும், ஆனால் ஹமாஸ் அதனை ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
அக்டோபர் 7-ஆம் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து இஸ்ரேல் காஸா மீது பதில் தாக்குதல் நடத்திவருகிறது. அப்போதிருந்து அல்-ஷிஃபாவைத் தவிர, காஸா பகுதி முழுவதும் உள்ள பிற மருத்துவமனைகள் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத் தடை உள்ளிட்ட பரவலான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மருத்துவமனையினர் செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு, அங்கு கிடக்கும் 150 சடலங்களை அடக்கம் செய்ய முயற்சித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கல் கூறுகின்றன