ஹிஜாப், தாலி உள்ளிட்டவை அணிந்து தேர்வு எழுதஅனுமதி மறுப்பு!

ஹிஜாப், தாலி உள்ளிட்டவை அணிந்து தேர்வு எழுதஅனுமதி மறுப்பு!

  டி.இ.முகமது,

கர்நாடகாவில், பட்டதாரிகளை தாலியை அகற்றிவிட்டுபெண் தேர்வு மையத்துக்குள் அனுமதித்தது குறித்த விவகாரத்தில் அரசுக்குஎதிராக ஏபிவிபி மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது ஹிஜாப் விஷயத்தை மையப்படுத்தி முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 கடந்த 6-ம் தேதி மாநில அரசின் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கர்நாடகாவில் போட்டித் தேர்வு நடைபெற்றது. இதில் தலைப்பாகை, ஹிஜாப், தாலி உள்ளிட்டவை அணிந்து தேர்வு எழுதஅனுமதி மறுக்கப்பட்டது.

மைசூருவில் தாலியை அகற்றிவிட்டுபெண் பட்டதாரிகளை, தேர்வு மையத்துக்குள் அனுமதித்தது குறித்த செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அரசுக்குஎதிராக ஏபிவிபி மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, கர்நாடக பணியாளர் தேர்வாணையம் புதிய விதிமுறை அறிவித்துள்ளது. அதில், "இனி தேர்வு மையங்களில் தலைப்பாகை, ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை. தேர்வில் ஒழுங்கீன நடவடிக்கைகளை தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தாலி, கழுத்து சங்கிலி உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து தேர்வுஎழுத அனுமதிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து இஸ்லாம் அமைப்பு சார்பில் தெரிவிக்கையில், "கடந்த பாஜக ஆட்சியில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், இப்போது ஆளும்கட்சியானதும் அதே நடவடிக்கையை மேற்கொள்கிறது" இது தான் அரசியலா என்கிறார்கள்.