வாணியம்பாடி சூப்பர் மார்கெட் மீது பெட்ரோல் குண்டு!

வாணியம்பாடி சூப்பர் மார்கெட் மீது பெட்ரோல் குண்டு!

  ஜி.கே.சேகரன்,

  வாணியம்பாடியில் சூப்பர் மார்க்கெட் கடை முன்பு மதுபானம் அருந்தக்கூடாது என உரிமையாளர் கூறியதால் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை

   திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதி சேர்ந்தவர் சவுகத் அலி, இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். அப்பகுதியில் இரண்டு பேர் கடை முன்பு அமர்ந்து மதுபானம் அருந்தி கொண்டிருந்ததால் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும், மது அருந்து கூடாது என சவுகத் அலி கண்டித்துள்ளார் ஆத்திரமடைந்த இருவர் மது பாட்டில் பெட்ரோல் நிரப்பி கடை மீது வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர் இதைக் குறித்து சவுகத் அலி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 மதுபானம் அருந்தக்கூடாது என கடை உரிமையாளர் கூறியதற்கு கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது உள்ளது.