தனியார் உரத் தொழிற்சாலையில் வாயுக் கசிவு! மக்கள் பீதி!

ஜி.சாந்தகுமார்,
எண்ணூர் அருகே உள்ள பெரியக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இந்த தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதால் சக கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்து கிராமத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.
பலர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இதையடுத்து தொழிற்சாலை மற்றும் காவல் துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாயுக் கசிவு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்ததாக காவல் துறை தகவல் அளித்துள்ளது.
இந்த பாதிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அதோடு இனி இது போல ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும் என மக்கள் அச்சத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.