பொது இடத்தை வளைக்க முயற்சி! பா.ம.க.சார்பில் ஆட்சியரிடம் புகார்!

ஜி.கே.சேகரன்,
பொது இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதாக கூறி பாமக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த வளையாத்தூர் மோட்டூர் பகுதியில் 1.08 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டி பாமக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
மேற்படி இந்த நிலத்தை ஊர் பொதுமக்கள் திருவிழா நேரத்தில் பொங்கல் வைப்பதற்கும், எருது விடும் திருவிழா நடத்தவும் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனிநபர்கள் சிலர், அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாகவும், உடனடியாக இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி மனு அளித்தனர்.