பேரறிஞருக்கு ஆட்சியர் அலுவலகத்தில் மாலை மரியாதை!

கு.அசோக்,
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணாவின் திரு.உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வேலூர்மாவட்டம்,வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார்.
இவ்விழாவில் திரளான அரசு ஊழியர்கள் பங்கேற்று அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.