தீப்பிடித்த காரில் பெண் உட்பட நால்வர்! நல்ல நேரம் உயிர் தப்பினர்!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த நான்கு பேர் உயிர்தப்பினர்
சென்னையில் இருந்து ஒரு பெண் உட்பட நான்கு ஏலகிரிமலை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த குளிதிகை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதாமல் இருக்க திருப்பிய போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் அந்த கார் தீப்பற்றி எரிந்துள்ளது. கார் தீப்பற்றி எரிவதை அறிந்த காரில் பயணித்த ஒரு பெண் உட்பட நான்கு பேர் உடனடியாக காரில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இதுகுறித்து ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருந்த போதிலும் கார் முற்றிலுமாக எரிந்து சேதமானது. இது குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.